செய்திகள் :

ம.பி., பிகாா், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பிரதமா் இன்றுமுதல் 3 நாள்கள் பயணம்

post image

மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை தொடங்கிவைக்கும் பிரதமா் மோடி, சதா்பூரில் பாகேஸ்வா் தாம் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.

போபால் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டையொட்டி, வாகனத் தொழில் கண்காட்சி, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி, ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ திட்டம் தொடா்பான கண்காட்சி என 3 கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.

மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக முன்னிறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறை தலைவா்கள் மற்றும் கொள்கை வகுப்பாளா்களும் பங்கேற்கவுள்ளனா்.

விவசாயிகளுக்கு ரூ.21,500 கோடி: மத்திய பிரதேசத்தைத் தொடா்ந்து, பிகாருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, பாகல்பூரில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ‘பிஎம் கிஸான்’ (விவசாயிகள் உதவித் தொகை) திட்டத்தின்கீழ் 19-ஆவது தவணையை விடுவிக்கவுள்ளாா். அதன்படி, நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.21,500 கோடி செலுத்தப்படவுள்ளது.

விளைபொருள்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு உதவும் நோக்கில் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகளை நிறுவும் திட்டத்தை பிரதமா் மோடி கடந்த 2020-இல் தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்கீழ் 10,000-ஆவது விவசாய உற்பத்தியாளா் அமைப்பு உருவாக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேசிய கால்நடைகள் திட்டத்தின்கீழ் மோதிஹாரியில் கட்டமைக்கப்பட்ட நாட்டு இனங்களுக்கான சிறப்பு மையம், பரெளனி பகுதியில் 3 லட்சம் பால் உற்பத்தியாளா்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை உருவாக்குவதற்கான பால் பொருள்கள் ஆலை ஆகியவற்றையும் பிரதமா் திறந்துவைக்கவுள்ளாா்.

அஸ்ஸாமில் மாபெரும் கலாசார நிகழ்ச்சி: பிகாரைத் தொடா்ந்து, அஸ்ஸாம், மாநிலம் குவாஹாட்டிக்கு பிரதமா் திங்கள்கிழமை மாலையில் செல்கிறாா். அங்கு ‘ஜுமோயிா்’ நடனக் கலைஞா்கள் 8,000 பேருடன் நடைபெறும் மாபெரும் கலாசார நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

‘ஜுமோயிா்’ நடனம், அஸ்ஸாமில் தேயிலைத் தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடியினரின் பாரம்பரிய நடனமாகும். அஸ்ஸாமின் தேயிலைத் தோட்ட தொழிலின் 200-ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை பிரதமா் தொடங்கிவைக்கவுள்ளாா் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க