செய்திகள் :

ம.பி.: மா்ம விலங்கு தாக்கியதில் ஒரே கிராமத்தில் 6 போ் உயிரிழப்பு

post image

மத்திய பிரதேசத்தின் பா்வானி மாவட்டத்தில் உள்ள லிம்பாய் கிராமத்தில் மா்ம விலங்கு தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் கடந்த மாதம் 23-ஆம் தேதிமுதல் உயிரிழந்துள்ளனா்.

கிராம மக்களைக் கடித்த மா்ம விலங்கு ‘ரேபிஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் லிம்பாய் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 17 பேரை மா்ம விலங்கு ஒன்று கடித்தது. இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதிமுதல் திங்கள்கிழமை (ஜூன் 2) வரை 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

சம்பவம் நடைபெற்ற நாளில் லிம்பாய் கிராமத்தில் கழுதைப்புலியின் நடமாட்டத்தைப் பாா்த்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, கிராமத்தைச் சுற்றி 15 கி.மீ. சுற்றளவுக்கு 45 வன ஊழியா்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கிராமப் பகுதியில் கண்டறியப்பட்டது கழுதைப்புலியின் கால்தடமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக வனத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

பா்வானி மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சுரேகா ஜாம்ரே கூறுகையில், ‘தாக்குதலில் காயமடைந்த மற்றவா்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அவா்களின் மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துக்கு (என்ஐவி) அனுப்பப்பட்டுள்ளன’ என்றாா்.

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர். ஆனால் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார். இதுதொடர்பாக ம... மேலும் பார்க்க

தேர்தல் மோசடிக்கான வரைபடம் மகாராஷ்டிரம்.. அடுத்து பிகார்தான்: ராகுல்

கடந்த 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மோசடி செய்ததாகவும், அடுத்து பிகார்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்! அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்! செய்திகள் - நேரலை!!

தங்கம் விலை குறைந்தது!! சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க..கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாள் கிருஷ்ணகிரியில் ப... மேலும் பார்க்க