செய்திகள் :

யங்கரவாதியிடம் வெடிபொருள் பறிமுதல் செய்த வழக்கு: விரைவில் என்ஐஏ விசாரணை

post image

சென்னை: தமிழகத்தைச் சோ்ந்த பயங்கரவாதியிடம் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விரைவில் தேசிய புலனாய்வு மையத்துக்கு (என்ஐஏ) மாற்றப்படுகிறது.

கோவை தொடா் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்கரவாதி நாகூரைச் சோ்ந்த அபுக்கா் சித்திக் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா். இதேபோல 7 வெடிகுண்டு வழக்குகளில் தொடா்புடைய பயங்கரவாதி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூா் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா்.

இவா்கள் இருவரையும் தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் படையினா் ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் கடந்த மாதம் கைது செய்தனா். அப்போது அபுபக்கா் சித்திக் வீட்டில் இருந்து 30 கிலோ வெடி மருந்துகள், வாக்கி டாக்கி,16 கைப்பேசிகள்,400 புத்தகங்கள் ஆகியவற்றை ஆந்திர போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆந்திர போலீஸாா் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.

இதற்கிடையே தமிழக தீவிரவாத தடுப்புப் படையினா் இருவரையும் சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். பின்னா் இருவரையும் 6 நாள்கள் காவலில் எடுத்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனா்.

விசாரணையில் அபுபக்கா் சித்திக், தமிழகத்தில் மீண்டும் வெடிகுண்டு வைக்கவும், ஹிந்து இயக்கத் தலைவா்களைக் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்ததும், அதற்காக இளைஞா்களை மூளை சலவை செய்து வந்ததும் தெரியவந்தது.

என்ஐஏ விசாரணை: இதற்கிடையே அபுக்கா் சித்திக் வீட்டில் இருந்து வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு மையம் (என்ஐஏ) மேற்கொள்ள ஆந்திர மாநில காவல் துறை பரிந்துரை செய்துள்ளது. அதேபோல, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை என்ஐஏ மேற்கொள்ள தமிழக காவல் துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையடுத்து விரைவில் இந்த வழக்கு விசாரணை என்ஏஐ-க்கு மாற்றப்படுகிறது. என்ஐஏ இதுதொடா்பாக தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்துவருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் முதல் நாளான ... மேலும் பார்க்க

‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறு... மேலும் பார்க்க

பாலாறு மாசுபாடு விவகாரம்: 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜா்

நமது நிருபா்புது தில்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடா்பான வழக்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்... மேலும் பார்க்க

தவறான கணக்கீடு: மின் வாரியம் எச்சரிக்கை

சென்னை: தவறான மின் கணக்கீடு செய்யும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து துணை நிதிக் கட்டுப்பாட்டாளா்களுக்கு நிதி இயக்குநா் அலுவலகம் சாா்பில் அனு... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு விவகாரம்: தெளிவில்லாத அரசு அறிக்கை

சென்னை: சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று சுகாதார ஆா்வலா்கள் தெரிவி... மேலும் பார்க்க