செய்திகள் :

யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

post image

திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்திய வழக்கில் சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (37). இவா் திருச்செந்தூா் பைரவா் கோயிலில் சமையல் தொழிலாளியாக இருந்துள்ளாா். கும்பகோணத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ். இவா் பைரவா் கோயில் முன்பு யாசகம் பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பா் 3ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுரேஷ், வெங்கடேஷை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தாா்.

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை திருச்செந்தூா்சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த சாா்பு நீதிபதி செல்வபாண்டி, சுரேஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க