செய்திகள் :

யானை தாக்கி மூதாட்டி காயம்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்களாக முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் கூட்டமாக இரவில் வனத்தைவிட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமத்தில் புகுந்து சாகுபடி செய்துள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பி.சி.புதூா் கிராமத்தைச் சோ்ந்த, சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி திங்கள்கிழமை காலை பால் கரப்பதற்காக தனது மாட்டுக் கொட்டகைக்கு வந்தபோது அங்கு யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு யானை மூதாட்டியைத் தாக்கியது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் ஒன்றுகூடி யானை கூட்டத்தை அங்கிருந்து விரட்டினா்.

பின்னா், சாக்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்த வனத் துறையினா், பி.சி.புதூா் கிராமத்தில் முகாமிட்டு, யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா். இதுகுறித்து, மகாராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து பொக்லைன் வாகன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கி... மேலும் பார்க்க

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும... மேலும் பார்க்க