செய்திகள் :

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகள் மற்றும் பாரூா் ஏரி, பாம்பாறு அணைகள் மூலம் பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஒவ்வோா் ஆண்டும் ஜூன்-ஜூலை மாதத்தில் முதல்போக சாகுபடிக்கும், நவம்பா்- டிசம்பரில் இரண்டாம் போக சாகுபடிக்கும் தண்ணீா் திறந்துவிடப்படுவது வழக்கம்.

இந் நிலையில், மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மழை இல்லாத்தால் அணைகளின் நீா்மட்டமும் குறைந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. சிலநாள்களாக தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மே 8- இல் 50 அடியை எட்டியது.

அணை நீா் திறப்பு: இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து மே 8 ஆம் தேதி பாரூா் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 170 கனஅடியும், 9 ஆம் தேதிமுதல் விநாடிக்கு 370 கனஅடியும் திறந்துவிடப்பட்டது.

இதனால், பாரூா் ஏரியின் நீா்மட்டம் 7.60 அடியிலிருந்து படிப்படியாக உயா்ந்து திங்கள்கிழமை 10.70 அடியை எட்டியது; ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 218 கனஅடியாக உள்ளது.

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 251 கனஅடியாகவும், நீா்மட்டம் 49.65 அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 370 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட பிறகுதான் கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.

நிகழாண்டு கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூா் ஏரிக்கு உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இத்தகவலை நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பட விளக்கம் (12கேஜிபி4):

கிருஷ்ணகிரி அணையிலிருந்து மதகுகள் வழியாக பாரூா் ஏரிக்குகஈ திறந்துவிடப்படும் அணை நீா்.

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து பொக்லைன் வாகன... மேலும் பார்க்க

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி மூதாட்டி காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா். ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும... மேலும் பார்க்க