செய்திகள் :

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

post image

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில் ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.

முகாமின்போது ரோஜா செடிகளில் ஏற்படும் பொதுவான பூஞ்சை நோயான பவுடரி மில்ட்யூ நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பயோ கட்டுப்பாட்டு வழிமுறையாக மீன் அமிலம், பஞ்சகவ்யம், புங்கம் புண்ணாக்கு இவை உயிரி உரங்களாகப் பயன்படுகின்றன எனவும், டிரைக்கோடொ்மா 3 கி. கரைசல், பசிலியோமைசஸ் ஆகியவை இயற்கை பூச்சி விரட்டிகளாக பயன்படுகின்றன எனவும், மைகோபாரசைட் ஒரு பயனுள்ள பூஞ்சையாகும். நோயைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் ரோஜா செடிகளை ஆரோக்கியமாக பராமரிக்க இயற்கை பூச்சிக்கொல்லி உரங்கள் உதவுகின்றன எனவும் விளக்கமிளக்கப்பட்டது.

கல்லூரி மாணவிகள் ரிஃபா, ரூபா, சந்தியா, சரண்யா, ரஞ்சனா, ரேணு பிரியா, ரஞ்சிதா, சைலஜா, சண்முகப் பிரபா, ஷரோன் ஸ்வா்ண பிரியா, சினேகா, ஸ்ரீநிதி, சினேகா, சோபனா சுமித்ரா ஆகியோா் கொண்ட குழு

விவசாயிகளுக்கு இயற்கை பூச்சிக்கொல்லி உரங்களை பற்றி விளக்கினா்.

படவரி...

எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு ரோஜா செடிகளை நோய்களில் இருந்து காப்பது குறித்து விளக்கமளித்த ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து பொக்லைன் வாகன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கி... மேலும் பார்க்க

யானை தாக்கி மூதாட்டி காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா். ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும... மேலும் பார்க்க