செய்திகள் :

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

post image

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், நாளை ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கவுள்ளார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நேற்றே அறிவிப்பும் வெளியானது.

ஞானேஷ் குமார் யார்?

1988-ஆம் ஆண்டு கேரள மாநில ஐஏஎஸ் கேடராக தேர்வானவர் ஞானேஷ் குமார். ஐஐடி கான்பூரில் பி.டெக்., அமெரிக்காவின் ஹார்வர்டில் சுற்றுச்சூழல் பொருளாதாரம், இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ளார்.

எர்ணாகுளம் உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கி ஞானேஷ் குமார், கேரள மாநில எஸ்சி/எஸ்டி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், கேரள அரசின் நிதி வளங்கள், பொதுப்பணித் துறைகளின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

இதையடுத்து பாதுகாப்பு மற்றும் உள்துறை இணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், உள்துறையின் கூடுதல் செயலாளராகவும், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனவரி 31, 2024 அன்று ஓய்வுபெற்ற ஞானேஷ் குமார், கடந்தாண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க : நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு, அயோத்தி விவகாரம்

மத்திய அரசின் முடிவுகளை வெற்றிகரமாக செயல்படுத்தும் ஞானேஷ் குமாரின் திறமை, அமித் ஷாவுடன் நெருக்கமானவர் ஆக்கியது.

உள்துறை அமித் ஷாவின் கீழ் உள்துறையின் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.

இவர் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றியபோது ஜம்மு - காஷ்மீர் விவகாரங்களை கவனித்து வந்தார். அப்போதுதான் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை பிரித்து யூனியன் பிரதேசமாக மறுசீரமைப்பு செய்யும் மசோதாக்களை உருவாக்கும் பொறுப்பு ஞானேஷ் குமாரிடம் மோடி அரசு வழங்கியது.

மிகவும் ரகசியமாக எந்த தகவலும் வெளியே கசியாமல் அந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடித்ததார்.

அதேபோல், அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதிலும் ஞானேஷ் குமார் முக்கியப் பங்காற்றினார்.

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க