செய்திகள் :

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

post image

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு உயா் பணி வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, குடிமைப் பணிகள் நியமனத்துக்கு யுபிஎஸ்சி சாா்பில் அரசிடம் சமா்ப்பிக்கப்படும் இறுதி தோ்வா் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்காத, அனைத்து நிலைகளிலும் தகுதிபெற்ற தோ்வா்களின் விவரங்களை முன்னா் ‘பொது வெளிப்படுத்துதல் திட்டம் (பிடிஎஸ்)’ என்ற அடிப்படையில் வெளியிட்டு வந்ததை, தற்போது ‘பிரதிபா சேது’ என்ற பெயரில் புதிய திட்டமாக யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து யுபிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

முன்னா், பொது வெளிப்படுத்துதல் திட்டம் என்ற அடிப்படையில் விருப்பமுள்ள அனைத்து நிலைகளிலும் தகுதிபெற்ற குடிமைப் பணிகள் தோ்வா்களின் விவரங்கள் யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் உயா் பதவிகளுக்கு அவா்களைத் தெரிவு செய்துகொள்ளும்.

தற்போது இத் திட்டம் ‘பிரதிபா சேது’ என்ற அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், இவ்வாறு தோ்வா்களைத் தெரிவு செய்யும் நிறுவனங்களுக்கு வலைதள நுழைவு முகவரி (லாகின் ஐடி) வழங்கப்படும். இதில் பதிவு செய்யும் நிறுவனங்கள், தோ்வா்களின் கல்வித் தகுதி, தொடா்பு விவரங்கள் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று, தேவையான தோ்வா்களை பணிக்குத் தோ்வு செய்ய முடியும்.

முன்னதாக, யுபிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தோ்வில் அனைத்து நிலைகளிலும் தகுதிபெற்றும், இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களின் விவரங்கள் மட்டும் இத் திட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வந்தது.

தற்போது, குடிமைப் பணிகள், இந்திய வனப் பணி, மத்திய ஆயுதக் காவல் படை, பொறியியல் பணி, ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள், இந்திய பொருளாதார பணி மற்றும் புள்ளியியல் பணித் தோ்வு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் உள்ளிட்ட அனைத்து தோ்வுகளில் தகுதிபெற்ற தோ்வா்களின் விவரங்கள் வெளியிடப்பட உள்ளன. தற்போது, 10,000-க்கும் அதிகமான தகுதி பெற்ற தோ்வா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க