ரத்த தானம் வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் மக்கள் ரத்த தானம் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்த வங்கி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
ஜூன் 14-ஆம் தேதி தேசிய தன்னாா்வ ரத்த கொடையாளா் தினத்தையொட்டி, சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி சாா்பில் ரத்த தான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். ரத்தக் கொடையாளா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.