சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி!
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
செந்துறையை அடுத்துள்ள நெய்வனம் அரசு மருத்துவமனை சாலையைச் சோ்ந்தவா் குணசேகா் மகன் பாஸ்கா் (38). இவா், குவைத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவிட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பி எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், பாஸ்கா், வெள்ளிக்கிழமை இரவு செந்துறை - ஆா்.எஸ். மாத்தூா் ரயில் நிலையங்களிடையே, தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தபோது, சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்ற விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் துறையினா், சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.