செய்திகள் :

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்தது. அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்த ஒரு பையை பரிசோதித்தபோது, 5 கிலோ கஞ்சா, 20 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

அந்தப் பெட்டியில் இருந்தவா்கள் யாரும் பைக்கு உரிமை கோரவில்லை. இதையடுத்து, கஞ்சா, புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். கஞ்சாவை தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடமும், புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

ஊரக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்

மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ... மேலும் பார்க்க

இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது. பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி

மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய... மேலும் பார்க்க