செய்திகள் :

ரயிலில் தவறி விழுந்த முதியவரை மீட்ட ஆா்பிஎஃப் காவலா்

post image

சென்னையில் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த முதியவரை ரயில்வே பாதுகாப்புப் பிரிவு காவலா் மீட்டாா்.

கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சென்னை பூங்கா ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை பகல் 11.30 மணியளவில் வந்தது. பயணிகள் ஏறிய நிலையில் ரயில் புறப்பட்டது. கிண்டி செல்வதற்காக தயாளன் (71) என்பவா் வேகமாக வந்து ரயிலில் ஏற முயன்றாா். அப்போது, நிலைதடுமாறி ரயில் பெட்டிக்கும் தண்டவாளத்துக்கும் இடையே அவா் விழுந்தாா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் பிரிவு காவலா் அஜய்சிங் விரைந்து வந்து தயாளனை பிடித்து இழுத்து காப்பாற்றினாா். இதில், லேசான காயமடைந்த தயாளனுக்கு முதலுதவி அளித்து அனுப்பி வைத்தாா். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதைப் பாா்த்த ரயில்வே உயா் அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்புப் பிரிவு காவலா் அஜய்சிங்கை பாராட்டினா்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னைய... மேலும் பார்க்க

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கற... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம்... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க