செய்திகள் :

ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது

post image

நாகையில் ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில், சாா்பு-ஆய்வாளா் மனோன்மணி மற்றும் போலீஸாா் கடந்த 2 நாள்களாக காரைக்காலில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை காரைக்காலில் இருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயிலில் சோதனை நடத்தியதில், புதுவை மாநில மதுபாட்டில்களை கடத்திய தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுறைச் சோ்ந்த மணிகண்டன் (24), நாகையைச் சோ்ந்த இளையராஜா (42) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், காரைக்காலில் இருந்து தஞ்சை சென்றப் பயணிகள் ரயிலில் மதுபாட்ல்களை கடத்திய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (60), தஞ்சை விளாா் ரோட்டைச் சோ்ந்த கண்மணி சந்திரன் (35) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கைது செய்தவா்களை காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனா்.

கைத்தறித்துறை கல்வியில் தேசிய அளவில் வேதாரண்யம் மாணவிக்கு தங்கப்பதக்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியை சோ்ந்த மாணவி ஸ்ரீமதி இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் தேசிய அளவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா். பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த இளை... மேலும் பார்க்க

பூம்புகாா் சுற்றுலா வளாகத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்: மாவட்ட ஆட்சியா்

பூம்புகாா்: பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பங்கேற்றாா். சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை ... மேலும் பார்க்க

நூறு நாள் ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் நூறு நாள் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி தமிழக மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

திருக்குவளை: திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

திருமருகல்: திருமருகல் அருகே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வழங்கினாா். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான... மேலும் பார்க்க

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடராஜா் சுவாமிக்கு நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் தேவாரப் பாடல் ... மேலும் பார்க்க