செய்திகள் :

ரயிலில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

post image

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சோதனையிட்டதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

ஜாா்க்கண்ட் மாநிலம், டாடாநகா் பகுதியிலிருந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் வரை சென்ற எா்ணாகுளம் விரைவு ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது முன்பக்கம் உள்ள பொது பெட்டியில் பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் சோதனை செய்ததில் 13 மூட்டைகளில் ரூ.11 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பின்னா், கஞ்சாவை சென்னை அம்பத்தூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உமா்ஆபாத் முதல் வாணியம்பாடி உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த... மேலும் பார்க்க

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்யப்பட்ட பழைய வாகனகளை வாங்க, விற்பனை செய்ய அங்கீகாரம் பெற முகவா்கள் விண்ணப்பிக்கலாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா்செல்வம் (திருப்பத்தூா்), வெங்கட்ராகவன்(வாணியம்பாடி)ஆகியோா் தெர... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 40 லட்சம் கடனுதவி

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரும்பூா் ஊராட்சித் தலைவா் ஏ.கே. மோகேஷ் தலைமை வகித்தாா். பேங்க் ஆப் பரோடா வங்கி ஆம்பூா் கிளை... மேலும் பார்க்க

விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

வாணியம்பாடியில் சாலை தடுப்பு மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், புதூா் நாடு மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (39). நாட்டறம்பள்ளி... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

ஆம்பூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளா் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அமைப்பை சோ்ந்த குமரன், ஸ்ரீதா், திருப்பதி ,பனிமலா், ராஜ்குமாா் கிருஷ்ணமூா்... மேலும் பார்க்க