செய்திகள் :

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

post image

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்துக்கே முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தட்கல் முன்பதிவுக்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது.

அதன்படி, ஜூலை 1 முதல் ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ரயில்வே முன்பதிவு அலுவலகங்களிலும் ஆதார் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்ட பின்னரே முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது முன்பதிவில்லா பெட்டிகளில் அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

90 முதல் 100 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் உள்ள முன்பதிவுப் பெட்டிகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக தில்லி ரயில் நிலையத்தில் கூடிய பயணிகளிடையே கூட்டநெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்துக்கு, அளவுக்கு அதிகமான பயணிகளுக்கு முன்பதிவில்லா டிக்கெட் வழங்கியதே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தொலைதூர ரயில்களில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட் மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. தற்போது முதல்கட்டமாக தில்லி ரயில் நிலையத்தில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் வீதம் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.

எடுத்துகாட்டாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு குறிப்பிட்ட நேரத்தில் 2 ரயில்கள் புறப்படும் பட்சத்தில், இரண்டு ரயில்களிலும் தலா 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் 1,200 முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

There is a restriction on issuing tickets for travel in unreserved compartments on trains.

இதையும் படிக்க : மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க