செய்திகள் :

ரயில்வே கட்டடத்துக்கு மாநில அரசு வரி விதிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

post image

ரயில்வேக்கு சொந்தமான கட்டடத்துக்கு மாநில அரசு வரி விதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

மதுரை ரயில் நிலையம் முன் ரயில்வேக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் மதுரை ‘மல்டி பங்ஷனல் காம்ப்ளக்ஸ்’ நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வணிக வளாகத்துக்கு அரையாண்டு சொத்து வரியாக ரூ.10,07,623 செலுத்த மதுரை மாநகராட்சி கடந்த 3.3.2018 அன்று அறிக்கை (நோட்டீஸ்) அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அந்த நிறுவனம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி, மாநகராட்சிக்குச் சொத்து வரி செலுத்த உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த 6.5.2020 அன்று உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி, ‘மல்டி பங்ஷனல் காம்ப்ளக்ஸ்’ நிறுவனம் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்தியா முழுவதும் ரயில்வேக்கு சொந்தமான இடங்களை வணிக ரீதியாக மேம்படுத்த ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக இா்கான் கட்டமைப்பு, சேவை நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. மதுரை ரயில் நிலையத்தில் இா்கான் கட்டமைப்பு நிறுவனத்தால் கட்டப்பட்ட வணிக வளாகம், மனுதாரருக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.

ரயில்வேக்கு சொந்தமான கட்டடம் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், அந்தக் கட்டடத்துக்கு சொத்து வரி விதிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 285-இல் மத்திய அரசின் சொத்துகளுக்கு மாநில அரசு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மனுதாரரின் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ள வணிக வளாகம் ரயில்வேக்கு சொந்தமானது. இதனால், இந்த வணிக வளாகம் சொத்து வரி விலக்குக்குள் வருகிறது.

எனவே, மதுரை மாநகராட்சி அனுப்பிய சொத்து வரி அறிக்கை, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், வணிக வளாகத்தில் இருப்பவா்கள் மாநகராட்சியின் சில வசதிகளை அனுபவித்து வருகின்றனா். இதற்கான கட்டணம் வசூலிப்பது தொடா்பாக வணிக வளாகத்தில் வா்த்தகம் செய்து வருவோருடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றனா் நீதிபதிகள்.

பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்க... மேலும் பார்க்க

தங்கையைத் தாக்கிய அண்ணன் கைது

மதுரையில் தங்கையைத் தாக்கியதாக அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை விஸ்வநாதபுரம் அதியமான் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் மனைவி சுப்புலட்சுமி (27). இவா், காதல் திருமணம் செய்து கொண்டதா... மேலும் பார்க்க

மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத... மேலும் பார்க்க

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்... மேலும் பார்க்க