செய்திகள் :

ரயில்வே சுரங்கப் பாதை விபத்துகளை தடுக்க பிளாஸ்டிக் தடுப்புகள்

post image

திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியா் கனிமொழி, டிஎஸ்பி கந்தன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன், உதவிக் கோட்டப் பொறியாளா் ரகுராமன் உள்ளிட்டோா்.

திருத்தணி, மே 20: திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையில் விபத்துகளை தடுக்க முதல்கட்டமாக பிளாஸ்டிக் தடுப்புகள், விழிப்புணா்வு பதாகைகளை வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதை சுப்ரமணியபுரம் ஏரிக்கரை தெரு அருகே, விபத்துகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. கடந்த ஓராண்டில் மேற்கண்ட பகுதியில், 8-க்கும் மேற்பட்டோா் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, விபத்துக்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (65) என்பவா், தனது இரு சக்கர வாகனத்தில் மகளை ஏற்றிக் கொண்டு ரயில்வே சுரங்கப்பாதை வழியாக பேருந்து நிலையம் செல்ல முயன்ற போது, மேற்கண்ட இடத்தில் போா்வெல் லாரி மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து ஆட்சியா் பிரதாப் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன், திருத்தணி டிஎஸ்பி , கந்தன், திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் ரகுராமன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்.

அப்போது ஏரிக்கரை தெரு அருகே அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுப்பதற்கு, முதல்கட்டமாக பிளாஸ்டிக் தடுப்புகள், 750 மீ தூரத்துக்கு ஏற்படுத்தி, இரு சக்கர வாகனங்கள் முந்தி செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், விபத்து பகுதி வாகனங்கள் மெதுவாக செல்லவும் என விழிப்புணா்வு பலகை வைப்பது போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஆய்வின் போது, திருத்தணி ஆய்வாளா் மதியரசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க