செய்திகள் :

ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

post image

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் சென்ற ஜாஃபர் ரயில் மீது தாக்குதல் நடத்திய பலோச் பயங்கரவாத அமைப்பு, அதனை சிறைப்பிடித்து, அதிலிருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பலோசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி 400 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் மீதே பலோச் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ரயில் ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்தப் பகுதியில் 17 சுரங்கப்பாதைகள் உள்ளன. மேலும் 8-வது சுரங்கப்பாதையில் இந்தக் கிளர்ச்சியாளர்களால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளுக்குள் ரயில்களின் வேகம் பெரும்பாலும் மெதுவாக இருக்கும் என்பதைக் கணித்து கிளர்ச்சியாளர்கள் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்திற்கு சுதந்திரம் கோரி போராடும் பலோச் பயங்கரவாதிகள் அமைப்பு 20 வீரர்களைக் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலோச் மக்கள் உள்பட 400 க்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

ரயிலை தடம் புரளச் செய்து அதன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக பலோச் பயங்கரவாதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தலையிட்டால், அனைத்து பணயக்கைதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் பலோச் பயங்கரவாதக் குழு எச்சரித்துள்ளது.

பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மக்களில் நிலை என்ன என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்த்த அனைவரும் தங்களது கண்ணையே நம்ப முடியாமல் கடும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!

பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்த... மேலும் பார்க்க

30 நாள் போர்நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் முன்வைத்த 5 முக்கிய முடிவுகள்!

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் ... மேலும் பார்க்க

டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்க அதிபரான டொனால... மேலும் பார்க்க

என்னை இங்கு புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவனைப்பற்றியதுதான் அது.பிறக்கும்... மேலும் பார்க்க

30 நாள்களில் போர்நிறுத்தம்: உக்ரைன் சம்மதம்!

ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ம... மேலும் பார்க்க