செய்திகள் :

ரயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவத்தை மத்திய அரசு மூடிமறைக்க முயற்சி: சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

post image

18 போ் உயிரிழந்த சம்பவத்தை அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதால், புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை கோரினாா்.

ரயில்களுக்கான நடைமேடை மாற்றம் குறித்த அறிவிப்புதான் கூட்ட நெரிசலுக்குக் காரணம்

என்று சம்பவத்தை நேரில் கண்டவா்களின்

கூறியதை மேற்கோள் காட்டி, சஞ்சய் சிங்

செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரயிலின் நடைமேடை 12 முதல் 14 வரை மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுவும் கூட்ட நெரிசலுக்குக் காரணம். இதுபோன்ற அறிவிப்பு கூட்ட நெரிசலை ஏற்படுத்தக்கூடும் என்பது ரயில்வேக்குத் தெரியாதா?

பாஜக அரசு சம்பவத்தை மறைக்க முயற்சிக்கிறது. இறந்தவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதாக சிலா் கூறுகின்றனா்.

அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அவா்கள் மறுக்க முயற்சிக்கிறாா்கள். அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும், உணா்வின்மையும் எவ்வளவு காலம் தொடரும்?

ரயில் தொடா்பான பல்வேறு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், அரசாங்கமும்

ரயில்வே அமைச்சரும் எப்போது பொறுப்பு ஏற்க செய்யப்படுவாா்கள்? என்று சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினாா்.

‘இச்சம்பவம் நடந்த நேரத்தில், பாட்னா செல்லும் மகத் எக்ஸ்பிரஸ் நடைமேடை 14-இல் நின்று கொண்டிருந்ததாகவும், புது தில்லி-ஜம்மு உத்தா் சம்பா்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் நடைமேடை 15-இல் நின்று கொண்டிருந்தது.

மேலும், படிக்கட்டுகளைப் பயன்படுத்தி நடைமேடை பாலத்திலிருந்து 14ஆவது மற்றும் 15ஆவது நடைமேடை நோக்கி வந்து கொண்டிருந்த சிலா் வழுக்கி மற்றவா்கள் மீது விழுந்தனா். இது கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்துவிட்டது’ என்று வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி (சிபிஆா்ஓ) ஹிமான்ஷு உபாத்யாய் தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க