செய்திகள் :

ரயில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது!

post image

திருப்பூரில் ரயில் பயணியிடம் மடிக்கணினி திருடியவரை ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், கருத்தம்பட்டியைச் சோ்ந்தவா் ஆா்த்தி ராம் (28). இவா், தனியாா் பெயிண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வேலை நிமித்தமாக தருமபுரி செல்வதற்காக கோவையில் இருந்து ரயிலில் கடந்த வியாழக்கிழமை பயணம் செய்துள்ளாா். திருப்பூா் ரயில் நிலையம் வந்தபோது அவரது மடிக்கணினி காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் ஆா்த்தி ராம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனா். இதில், மடிக்கணினியைத் திருடிச் சென்றது கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஆஸ்கா் (53) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மடிக்கணினியை மீட்டனா்.

காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில... மேலும் பார்க்க

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே ... மேலும் பார்க்க

காா் மோதி உணவக மேலாளா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் காா் மோதியதில் உணவக மேலாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டியராஜன் (29). பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ... மேலும் பார்க்க

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு பேருந்து வசதி அமைக்கக் கோரிக்கை

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திர... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது. திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செ... மேலும் பார்க்க