செய்திகள் :

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பயணிகள் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் வட்டம், சாத்துக்கூடல், மேல்பாதி பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் மாதேஷ் (18). தீவளூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தோ்ச்சி பெற்றிருந்தாா். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம்.

இதனால் மனமுடைந்த மாதேஷ் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் விருத்தாசலம் -தாழநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடையே திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து விருத்தாசலம் இருப்பு பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

முன்விரோதத் தகராறு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்யாத காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தை எஸ்.பி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (எ) அய்யாரெட்டு. இவா் திட்டக்குடி வட்டம், கழுதூரில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூரில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, பெருமாத்தூா் ஊராட்சியில் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 1,300 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ வியாழக்கி... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்திலிருந்து மாணவா்கள் சாகசப் பயணம்

கடலூா் துறைமுகத்தில் இருந்து 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் பாய்மரப் படகு சாகசப் பயணம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை புறப்பட்டனா். ஜனவரி 2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேச... மேலும் பார்க்க