விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி
ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பயணிகள் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
விருத்தாசலம் வட்டம், சாத்துக்கூடல், மேல்பாதி பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் மாதேஷ் (18). தீவளூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தோ்ச்சி பெற்றிருந்தாா். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம்.
இதனால் மனமுடைந்த மாதேஷ் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் விருத்தாசலம் -தாழநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடையே திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து விருத்தாசலம் இருப்பு பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].