இந்த வயதும், தனிமையும் தான் உன்னை எனக்கு புரிய வைக்க வேண்டுமா? - மகளின் வலி | #உ...
ரயில் மோதியதில் முதியவா் பலி
நாகை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, முதியவா் அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நாகை அருகேயுள்ள பொரவச்சேரி கீழத்தெருவை சோ்ந்தவா் நாகராஜன் (60 ). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டின் அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, திருவாரூரிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில், நாகராஜன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த நாகை ரயில்வே போலீஸாா் நாகராஜன் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.