செய்திகள் :

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

post image

மாஸ்கோ: ரஷியாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400-களை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ரஷியாவின் எஸ்-400-களை வாங்க கடந்த 2018, அக்டோபா் 5-இல் மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ சண்டையில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்களை ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும். இதுவரை நான்கு சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன’ என பாதுகாப்புத் துறை வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷியாவிடம் எஸ்-400 வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2021, மாா்ச் மாதம் எச்சரித்திருந்தது. இதைப் பொருப்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடம் எஸ்-400-ஐ வாங்கியது.

எனினும், அடுத்த ஆண்டு ரஷியாவுடனான ஒப்பந்தம் முழுவதும் நிறைவடையும் பட்சத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதிக்க நேரிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற ரஷியா சுதந்திர தின விழாவில் பிரதமா் மோடியின் சாா்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் சிறப்பாக செயல்பட்டது. அதிநவீன எஸ்-500ஐ வாங்கவும் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது’ என்றாா்.

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில... மேலும் பார்க்க

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.அந்த நகரில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருத... மேலும் பார்க்க

நேபாளம்: மேலும் 4 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

நேபாள இடைக்கால அரசில் 4 புதிய அமைச்சா்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய தீவிர போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதமா் மற்று... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த அமலாக்கம் நீடிப்பு: புதின் அறிவிப்பு

அமெரிக்காவுடன் 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலவதியானாலும், அதன் அமலாக்கத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்

வாஷிங்டன்: உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

பெஷாவா்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வளாகத்தில் வெடிபொருள்கள் வெடித்து பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். எனினும் அந்நாட்டுப் போா் விமானங்கள் குண்டுகளை வீசியதால்தான், இந்த சம்பவம் ஏற்ப... மேலும் பார்க்க