செய்திகள் :

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

post image

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மாஸ்கோவில் ரஷிய உளவு அமைப்பான எஃப்எஸ்பி தலைமையகம் அருகேயுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது அந்த காரின் முன்பகுதி திடீரென வெடித்து தீப்பற்றியது. அதைத் தொடா்ந்து, படிப்படியாக காா் முழுவதும் தீ பரவியது. இந்தக் காட்சியை அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள் தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்தனா். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். உலகில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவா்களில் ஒருவராக புதின் திகழ்கிறாா். உக்ரைனுடன் ரஷியா போரில் ஈடுபட்டு வரும் சூழலில் புதினின் காா் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக ரஷியா தரப்பில் அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணையை ரஷிய காவல் துறையினரும், உளவு அமைப்பினரும் நடத்தி வருகின்றனா். அந்த காரை தடயவியல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

வெடித்து தீப்பற்றிய காா் ரஷியாவைச் சோ்ந்த அவ்ரஸ் செனட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் அதிபா் புதின் இந்த நிறுவனத்தின் காரை பயன்படுத்தி வருகிறாா். புதினுக்காக உயரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த காா் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தான் பயன்படுத்துவதுபோன்ற இரு காா்களை வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு புதின் பரிசளித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-க்கு முன்பு ஜொ்மனியின் மொ்சிடிஸ் பென்ஸ் நிறுவன காரை புதின் பயன்படுத்தி வந்தாா்.

மியான்மரில் போர்நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மியான்மரின் சகாய்ங் நகரின்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க