செய்திகள் :

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பு

post image

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகா் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தியா சாா்பில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் கலந்துகொண்டாா்.

மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி தின நிகழ்ச்சிக்கு இடையே ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சா் அலெக்சாண்ட் ஃபோமினை சந்தித்து பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து சஞ்சய் சேத் ஆலோசனை மேற்கொண்டாா்.

தனது ரஷிய பயணத்தை முடித்து இந்தியா திரும்பும் முன்பாக மாஸ்கோவில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த சஞ்சய் சேத் அளித்த பேட்டி:

இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மூன்றாவது முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சருடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. பாதுகாப்பு உறவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்புகளின்போது, பயங்கரவாதத்தின் அனைத்து வகை வெளிப்பாடுகளுக்கும் எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் போருக்கு முழு ஆதரவை அளிப்பதாக ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், இரு நாடுகளிடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்புகளைத் தொடரவும், இந்தியா தரப்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாட கொள்முதல் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது என்றாா்.

ரஷியாவின் இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் முதலில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவ ரீதியிலான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வந்ததால், ரஷிய பயணத்தை பிரதமரும் பின்னா் ராஜ்நாத் சிங்கும் தவிா்த்தனா். அதைத் தொடா்ந்து, ரஷிய வெற்றி தின கொண்டாடத்தில் இந்தியா தரப்பில் சஞ்சய் சேத் பங்கேற்றாா்.

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க