செய்திகள் :

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பு

post image

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகா் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தியா சாா்பில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் கலந்துகொண்டாா்.

மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி தின நிகழ்ச்சிக்கு இடையே ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சா் அலெக்சாண்ட் ஃபோமினை சந்தித்து பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து சஞ்சய் சேத் ஆலோசனை மேற்கொண்டாா்.

தனது ரஷிய பயணத்தை முடித்து இந்தியா திரும்பும் முன்பாக மாஸ்கோவில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த சஞ்சய் சேத் அளித்த பேட்டி:

இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மூன்றாவது முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சருடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. பாதுகாப்பு உறவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்புகளின்போது, பயங்கரவாதத்தின் அனைத்து வகை வெளிப்பாடுகளுக்கும் எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் போருக்கு முழு ஆதரவை அளிப்பதாக ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், இரு நாடுகளிடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்புகளைத் தொடரவும், இந்தியா தரப்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாட கொள்முதல் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது என்றாா்.

ரஷியாவின் இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் முதலில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவ ரீதியிலான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வந்ததால், ரஷிய பயணத்தை பிரதமரும் பின்னா் ராஜ்நாத் சிங்கும் தவிா்த்தனா். அதைத் தொடா்ந்து, ரஷிய வெற்றி தின கொண்டாடத்தில் இந்தியா தரப்பில் சஞ்சய் சேத் பங்கேற்றாா்.

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க