செய்திகள் :

ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

post image

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் ராகுல் டிராவிட்டுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து செயல்படவுள்ளார்.

இதையும் படிக்க: ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டபோது, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். தற்போது, ராகுல் டிராவிட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக இணைந்து செயல்படவுள்ளனர். ஆனால், இந்த முறை சஞ்சு சாம்சன் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர்களாகவும் செயல்படவுள்ளனர்.

மனம் திறந்த சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.

ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது: தற்போது நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் முதல் சீசனில் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினேன். இளம் வீரருக்கான தேடலில் ஈடுபட்டிருந்த ராகுல் டிராவிட், என்னுடைய அணிக்காக விளையாட முடியுமா எனக் கேட்டார். அவர் கேட்ட அந்த நாள் முதல் இன்று வரை எனக்கு நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்துள்ளன.

இதையும் படிக்க: ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

நான் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இது மிகவும் தனித்துவமான மற்றும் சிறப்பான உணர்வைத் தருகிறது. அவர் எப்போதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அங்கமாக உள்ளார். அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் இந்திய அணி என இரண்டிலுமே அவரது தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன். ஆனால், அவர் தலைமைப் பயிற்சியாளராகவும், நான் கேப்டனாகவும் செயல்படவுள்ளது இதுவே முதல் முறை. இது உண்மையில் மிகவும் சிறப்பான தருணம். ராகுல் டிராவிட்டிடமிருந்து இனி வரும் ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறேன் என்றார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில்... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட்டின் தரத்தினை ஐபிஎல் தொடர் உயர்த்தியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொட... மேலும் பார்க்க

டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை மகளிரணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி ... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் மார்ச் 22 ஆம் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்... மேலும் பார்க்க