செய்திகள் :

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!

post image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ராய்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்ந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்

மே.இ.தீவுகள் மாஸ்டர்ஸ் - 179/5

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தினேஷ் ராம்தின் அதிரடியாக 22 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் பிரையன் லாரா 41 ரன்களும், வால்டன் 31 ரன்களும் எடுத்தனர். பெர்க்கின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ் மற்றும் குணரத்னே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை மாஸ்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.

இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (மார்ச் 16) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட்டின் தரத்தினை ஐபிஎல் தொடர் உயர்த்தியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொட... மேலும் பார்க்க

டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை மகளிரணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி ... மேலும் பார்க்க

ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயி... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் மார்ச் 22 ஆம் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்... மேலும் பார்க்க