செய்திகள் :

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

post image

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தி ஹர்சந்த்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கத்வாராவில் உள்ள நெடுஞ்சாலையில் அமைச்சரும் அவரது ஆதரவளார்களம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பாஜக தொண்டர்கள், ராகுல் திரும்பிச் செல்லுங்கள், நாட்டில் உள்ள அனைத்து தாய்களிடமும் மன்னிப்பு கேளுங்கள் என்ற பதாகைகள் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.

பாஜக ஆதரவாளர்களின் போராட்டத்துக்குப் பயந்து ராகுல் வழிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சிங்,

ராகுல் காந்திக்கும் ஒரு தாய் இருக்கிறார். வேறொருவரின் தாயைத் திட்டும் உரிமையை அவர் யாருக்கும் வழங்கக்கூடாது. ஒரு தாயைப் பற்றி இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களை அவர் கண்டித்திருக்க வேண்டும்.

அவதூறு பேசியவர்களை ஆதரிக்கவில்லை என்றும், அவர்களைத் தண்டிக்கப்படுவார்கள், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் அவர்களின் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பேன் என்றும் கூறியிருக்க வேண்டும்.

மாறாக, ராகுல் காந்தி அவர்களை மேலும் ஊக்குவிப்பது போல் தெரிகிறது, தாய்மார்களுக்கு எதிராக இதுபோன்ற மோசமான கருத்துக்கள் மேலும் கூறப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அமைச்சர் கூறினார்.

பிகாரில் தர்பங்காவின் புறநகரில் நடைபெற்ற விழாவில் நபர் ஒருவர் மோடியின் தாயைக் குறித்து அவதூறாகப் பேசியது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Uttar Pradesh Minister Dinesh Pratap Singh on Wednesday sat on a dharna at a highway to stop local MP Rahul Gandhi's convoy and demanded an apology for alleged abuses hurled at Prime Minister Narendra Modi's mother.

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

10 லட்சம்(1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க