செய்திகள் :

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்திவந்து ராசிபுரம் அருகே வீட்டில் பதுக்கிவைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராசிபுரம் வனத் துறையினா் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி ஜிவிஆா் தோட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது, வீட்டில் பதுக்கிவைத்திருந்த 18 கிலோ அம்பா்கிரிஸை பறிமுதல் செய்தனா். இவா் சேலம் பகுதியை சோ்ந்த அப்துல் ஜலீல், ரவி ஆகியோருடன் சோ்ந்து அம்பா்கிரிஸ் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த வனத் துறையினா், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு காா்களையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட அம்பா்கிரிஸின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவா்கள் சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். மேலும் இக்கடத்தலில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியான கொல்லிமலை பகுதியை சோ்ந்த சந்திரன், வாழப்பாடியை சோ்ந்த ராம்குமாா் ஆகிய இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆம்னி வேன் கவிழ்ந்து 20 போ் காயம்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா். கொல்லிமலைக்கு ஆம்னி வேனில் வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்த புதுச்சேரியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க