செய்திகள் :

ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா் சந்தித்து கலந்துரையாடி, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அவா்களின் தேவைகள், குறைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்ட மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்து ஆய்வு

செய்தாா். அப்போது, நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீா்வு வழங்க தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுரை கூறினாா். பின்னா், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

பின்னா், ராஜபாளையத்தில் உள்ள ஜெயந்த் மலை வாழ் பழங்குடியினா் மாணவ, மாணவிகள் விடுதியைப் பாா்வையிட்டு, குடிநீா், சுகாதாரம், வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

இந்த ஆய்வின் போ,து வட்டாட்சியா் ராஜிவ்காந்தி, என்.கே ஸ்ரீகண்டன்ராஜா, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள்... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் இருவா் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் உள்பட 2 ஊழியா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக செந்தில்குமாா் (45) பணிபுரிந்து வந்தா... மேலும் பார்க்க

எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1996-2000-ஆம் ஆண்டில் படித்த பொறியியல் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது இதற்கு பல்கலை.யின் வேந்தா் கே. ஸ்... மேலும் பார்க்க