செய்திகள் :

``ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்'' - செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்.

10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று நேற்று முன்தினம் (செப்.5) கறாராகப் பேசியிருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் 'அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும்' என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார்.

செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அதிமுகவில் அவர் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்து விடுக்கப்பட்டார்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அவர் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருக்கிறார். ஆனால், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த முன்னாள் அதிமுக எம்.பி. சத்தியபாமாவின் பதவி பறிக்கபடாமல் இருந்தது.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சத்தியபாமா, " அதிமுகவில் என் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக தொண்டர்கள், மக்களின் எண்ணங்களை செங்கோட்டையன் பிரதிபலித்திருக்கிறார். 2026 தேர்தலில் அதிமுக வென்றால்தான் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றலாம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``ஆக்கப்பூர்வமாக பேசும்போது, அக்கப்போர் வேண்டாம்'' - செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு ஸ்டாலின் பதில்

சென்னை விமான நிலையத்தில் வரவேற்புஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 8) தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்... மேலும் பார்க்க

மதிமுகவில் முற்றிய மோதல்; "அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து மல்லை சத்யா நீக்கம்" - வைகோ அறிக்கை

மதிமுக - மல்லை சத்யா!மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கடந்த நில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந... மேலும் பார்க்க

"மதுரையில் 100 அடி உயரத்தில் வ.உ.சி சிலை" - முதல்வருக்குப் புதிய நீதிக் கட்சித் தலைவர் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள வ.உ.சி கலையரங்கத்தை ஒட்டி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு 11 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.நேற்று நடை... மேலும் பார்க்க

"எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" - சர்டிபிகேட் கொடுத்த எ.வ.வேலு

"அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றுமில்லை, நண்பர் எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பாராட்டும் வகையில் பேசியுள்ளார். எ.வ. வேலுமதுரையில... மேலும் பார்க்க

``செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' - தளவாய் சுந்தரம் ஓபன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பனிப்போர் நடந்து வந்தது.இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 5)... மேலும் பார்க்க