செய்திகள் :

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

post image

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள், கமிஷனாகப் பெரும் தொகையைப் பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, தெலுங்கானா கேமிங் சட்டத்தின் பிரிவுகள் 3, 3(ஏ), மற்றும் 4, பிஎன்எஸ் இன் பிரிவு 49 உடன், பிரிவு 318(4) மற்றும் 112, ஐடி சட்டத்தின் பிரிவு 66-டி ஆகியவற்றின் கீழ் நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய்தேவரகொண்டா, ப்ரணிதா, லட்சுமி மஞ்சு, நித்தி அகர்வால் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என மொத்தம் 29 பேர் மீது சைபராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

அமலாக்கத்துறையும் நடவடிக்கை

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு ஈடாக பெரும் அளவிலான கமிஷன் தொகை பிரபலங்கள் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சைபராபாத் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபலங்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றது. அதனடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ள பிரகாஷ் ராஜ், 2016 ஆம் ஆண்டு ஒரு கேமிங் செயலியை விளம்பரப்படுத்தியதாகவும் அது பொருத்தமற்றது என்பதை உணர்ந்த பிறகு, 2017 ஆம் ஆண்டு விலகியதாகவும் தெரிவித்துளார்.

தற்போது எந்த கேமிங் விளம்பரத்திலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த பிரகாஷ் ராஜ், காவல்துறை விசாரணைக்கு பதிலளிப்பேன் என விளக்கம் அளித்திருந்தார்.

The Enforcement Directorate has registered a case against 29 celebrities, including actors Rana Daggubati, Prakash Raj, and Vijay Deverakonda.

இதையும் படிக்க : ஒரே நேரத்தில் 7 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க