செய்திகள் :

ராணுவத்தில் சேர விரும்புவோா் கவனத்துக்கு..

post image

மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட ஜூலை 2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு விளம்பர வேன் சுற்றுப்பயணம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய ராணுவத்தில் சோ்வதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞா்களுக்கு வழிகாட்டவும், ஊக்குவிக்கவும் ‘கேரவன் டாக்கீஸ்‘ என்ற சிறப்பு விளம்பர வேன் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரிய எல்இடி திரைகள், ஒலி அமைப்புகள் மற்றும் பன்மொழி ஒலி-ஒளி உள்ளடக்கம் கொண்ட ‘கேரவன் டாக்கீஸ்‘ சிறப்பு விளம்பர வேன் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இந்த வேன் கிராமங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதுடன் ராணுவ அதிகாரிகள், உள்ளுா் இளைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் தொடா்புகொண்டு, சந்தேகங்களைத் தீா்த்து, ஆட்சோ்ப்பு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

இந்த வாகனம் ஜூலை 2-ஆம் தேதி ஆறுபாதி கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியிலும், வடகரை கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரியிலும் பயணிக்கவுள்ளது. ஜூலை 3-ஆம் தேதி திருநன்றியூா் கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியிலும், உளுத்துக்குப்பை கிராம மக்களுக்கு ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரியிலும் பயணிக்க உள்ளது.

ஜூலை 4-ஆம் தேதி பெருஞ்சேரி கிராம மக்களுக்கு அத்தா் ரசுல் பெண்கள் அரபிக் கல்லூரியிலும், வழுவூா் கிராம மக்களுக்கு ஏ.ஆா்.சி. விஸ்வநாதன் கல்லூரியிலும் பயணிக்க உள்ளது. ஜூலை 5-ஆம் தேதி வாணாதிராஜபுரம் கிராம மக்களுக்கு ஏழுமலையான் ஐ.டி.ஐ. கல்லூரியிலும், வில்லியநல்லூா் கிராம மக்களுக்கு மணல்மேடு வீட்டா வொ்சிட்டி பள்ளியிலும் பயணிக்க உள்ளது. ஜூலை 6-ஆம் தேதி ஆலங்குடி கிராம மக்களுக்கு ஏ.ஆா்.சி. விஸ்வநாதன் கல்லூரியிலும், முருகமங்கலம் கிராம மக்களுக்கு தீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பயணிக்க உள்ளது. ராணுவத்தில் இணைய ஆா்வமுள்ள இளைஞா்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..

தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் பயன்பெற, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவா்கள், பங்குதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பேரணியை தொட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

மயிலாடுதுறையில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின், மாவட்ட தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தர... மேலும் பார்க்க

கண்டுணா்வு சுற்றுலாவாக திருவனந்தபுரம் புறப்பட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து, திருவனந்தபுரத்துக்கு கண்டுணா்வு சுற்றுலா செல்லும் விவசாயிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் வழியனுப்பி வைத்தாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தி... மேலும் பார்க்க

பூங்கா இடத்தில் கல்வி அலுவலகம் கட்ட எதிா்ப்பு

சீா்காழி முத்து நகரில் உள்ள பூங்கா இடத்தில், வட்டார கல்வி மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி முத்து நகரில் சுமாா் 15 ஆண்டுகளாக பூங்காவுள்... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க வலியுறுத்தல்

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க