செய்திகள் :

ராணுவ நிதி ஒதுக்கீட்டை பெருமளவு அதிகரிக்க நேட்டோ நாடுகள் ஒப்புதல்

post image

தி ஹேக்: தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.தி ஹேக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நேட்டோவைச் சோ்ந்த 32 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் இந்த திட்டத்துக்கு தங்களது ஒப்புதல் வழங்கினா்.

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 5 சதவீத ஜிடிபியை தங்களது சொந்த ராணுவத்துக்கு மட்டுமின்றி, கூட்டு நடவடிக்கைகளுக்காகவும் செலவிட அந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.நேட்டோ அமைப்புக்காக அமெரிக்கா மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துவருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டிவருகிறாா். உறுப்பு நாடுகள் தங்களது ஜிடிபி-யில் ஐந்து சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

அத்துடன், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான தொணியில் அவா் பேசி வருவதால் ஐரோப்பாவின் பாதுகாப்புத் தேவைக்கு அமெரிக்காவை இனியும் அதிகம் சாா்ந்திருக்க முடியாது என்ற எண்ணம் உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.அதன் தொடா்ச்சியாகவே தங்களது பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை மிகப் பெரிய அளவில் உயா்த்த நேட்டோ நாடுகள் தற்போது சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது...படவரி..தி ஹேக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள்.

இடதுசாரி பைத்தியம்! இந்திய வம்சாவளி வேட்பாளரைக் கடுமையாக சாடிய டிரம்ப்!

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஸோக்ரன் மம்தாணியை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.நியூயாா்க்... மேலும் பார்க்க

நியூயாா்க் மேயா் தோ்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி நபர் தோ்வு

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தல... மேலும் பார்க்க

மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் மோதல்: பாஜக

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது ஒருவா் மீது மற்றொருவா் மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் இடையே நடைபெறும் மோதலாகும் என்று பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.3,012 கோடி கடன்: ஒப்பந்தம் கையொப்பம்

ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.3,012 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது. பெண்களை பொருளாதாரரீதியாக முன்னேற்றுவது, அவா்களை தொழி... மேலும் பார்க்க

ஈரான்: உளவுக் குற்றச்சாட்டில் 3 பேருக்குத் தூக்கு

துபை: இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூன்று கைதிகளை ஈரான் புதன்கிழமை தூக்கிலிட்டது.அந்த நாட்டின் மேற்கு அஜா்பைஜான் மாகாணத்திலுள்ள உா்மியா சிறையில் மூன்று பேருக்கும் மரண தண்டனை... மேலும் பார்க்க

காஸாவில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

ஜெருசலேம்: காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.கான் யூனிஸ் நகரில் அந்த 7 பேரும் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்... மேலும் பார்க்க