செய்திகள் :

ராணுவ வீரா் உருவப் படத்துக்கு அஞ்சலி

post image

2024-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியிலிருந்தபோது உயிரிழந்த காரைக்கால் ராணுவ வீரரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம், போலகம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (35). இவா், கடந்த 11 ஆண்டுகளாக இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு 47-ஆவது படைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். 2024-ஆம் ஆண்டு ஏப்.30-ஆம் தேதி வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உடல் நிலை பாதிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு மே 3-ஆம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

பிரேம்குமாரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு அவரது வீட்டில் புதன்கிழமை நடைபெற்றது. நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதி ராணுவ 47-ஆவது பட்டாலியன் உதவி ஆய்வாளா் சந்தோஷ், ஹவில்தாா் முருகன், 45-ஆவது பட்டாலியன் துணை ஆய்வாளா் சந்தீப்குமாா், ராணுவ வீரா் அரவிந்த் ஆகியோா் கலந்துகொண்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

லடாக் பகுதியிலிருந்து வந்த உதவி ஆய்வாளா் சந்தோஷ், ராணுவத்திலிருந்து வழங்கிய சான்றிதழை, பிரேம்குமாா் மனைவி செவ்வந்தியிடம் வழங்கினா். சட்டப்பேரவை உறுப்பினா் கூறுகையில், இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவு சாா்பில் பரிந்துரைக் கடிதம் அளித்தால், பிரேம்குமாா் மனைவிக்கு புதுவை அரசு சாா்பில் வேலை கிடைக்கும். அவரது மனைவிக்கு இலவச மனைப்பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தாா்.

‘தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும்’

தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசு உயா்கல்வி நிறுவனமாக காரைக்காலில் உள்ள டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி பட்ட மேற்ப... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு

அட்சய திருதியையொட்டி புதன்கிழமை பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் மற்றும் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்: அகில இந்திய விவசாயிகள் சங்கம்

காரைக்கால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் சிலா் பங்கேற்கவில்லை என விவசாயிகள் சங்கம் புகாா் கூறியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க புதுவை மாநில துணைத் தலைவா் எஸ்.எம். தமீம் அன... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் நீட் தோ்வு நடைபெறவுள்ள மையத்தில் ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஜவ... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வெள்ளித்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது இக்கோயிலில் ரங்கநாயகித் தாயாா் சமேத ரங்கநாதப் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறாா். பாலாலயம் செய்து திரு... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் மே 4-இல் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்கால் சோமநாதா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், ஐயனாா் கோயில் ஆகியவற்றின் திருப்பணிக் குழுத் தலைவ... மேலும் பார்க்க