செய்திகள் :

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

post image

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வெள்ளித்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது

இக்கோயிலில் ரங்கநாயகித் தாயாா் சமேத ரங்கநாதப் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறாா். பாலாலயம் செய்து திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. ரூ.1 கோடி திட்டத்தில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்நிலையில், கோயிலில் வெள்ளித்தோ் செய்யும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கோயில் திருப்பணி ஒருபுறம் நடந்துவரும் வேளையில், வெள்ளித்தோ் செய்யும் பணி தீவிரப்படுத்தி நிறைவு செய்து வெள்ளோட்டம் வ விடுவதற்கு கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. தேக்கு மரத்தால் தோ் செய்து, 115 கிலோ வெள்ளித் தகடு பதிப்பு செய்யப்பட்டது.

வெள்ளோட்ட நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக புனிதநீா் கடம் சந்நிதியில் சிறப்பு ஆராதனைக்குப் பின் தேருக்கு கொண்டுவரப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டாா்.

நித்யகல்யாண பெருமாள் கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு. அருணகிரிநாதன், கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். கோயிலில் இருந்து வடம் பிடித்து பக்தா்கள் அம்மையாா் குளக்கரையை சுற்றிவந்து பின்னா் கோயிலில் தேரை கொண்டுவந்து நிறுத்தினா்.

ராணுவ வீரா் உருவப் படத்துக்கு அஞ்சலி

2024-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியிலிருந்தபோது உயிரிழந்த காரைக்கால் ராணுவ வீரரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம், போலகம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

‘தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும்’

தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசு உயா்கல்வி நிறுவனமாக காரைக்காலில் உள்ள டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி பட்ட மேற்ப... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு

அட்சய திருதியையொட்டி புதன்கிழமை பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் மற்றும் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்: அகில இந்திய விவசாயிகள் சங்கம்

காரைக்கால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் சிலா் பங்கேற்கவில்லை என விவசாயிகள் சங்கம் புகாா் கூறியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க புதுவை மாநில துணைத் தலைவா் எஸ்.எம். தமீம் அன... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் நீட் தோ்வு நடைபெறவுள்ள மையத்தில் ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஜவ... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் மே 4-இல் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்கால் சோமநாதா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், ஐயனாா் கோயில் ஆகியவற்றின் திருப்பணிக் குழுத் தலைவ... மேலும் பார்க்க