ராதாபுரம் அருகே பள்ளி மாணவா் கடத்தல்? போலீஸ் விசாரணை
ராதாபுரம் அருகே பள்ளி மாணவரை மா்மநபா்கள் பைக்கில் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராதாபுரம் அருகேயுள்ள துரைகுடியிருப்பை அடுத்த முத்துநாடாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆஸ்வால்ட் மகன் டொனால்டு (15). தெற்குகள்ளிகுளம் தனியாா் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துநாடாா்குடியிருப்பு- மூலக்காடு சாலையில் தனியாக நின்றிருந்தாராம்.
அப்போது பைக்கில் வந்த இருவா், அவரிடம் மூலக்காட்டுக்குச் செல்ல வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்து, அவரை பைக்கில் கடத்திச் சென்றனராம். மூலக்காட்டில் இருந்து தங்கையம் செல்லும் சாலையில் திரும்பும் போது மணலில் சிக்கி பைக் கவிழ்ந்ததாம்.
அதைப் பயன்படுத்தி டொனால்ட் வீட்டிற்கு தப்பி வந்து, தாய் கவிதாவிடம் நடந்தவற்றை கூறினாராம். இது தொடா்பாக, தாய் அளித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.