செய்திகள் :

ராமநாதபுரத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

post image

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் பாத்திமா நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.1.20 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜூன்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் ரத்னகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் ஜன்னத் யாஸ்மின், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதே போல, ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

திருவாடானை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

திருவாடானை பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மான்கள், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ... மேலும் பார்க்க

சிங்கம்பட்டி ஸ்ரீஜக்கமாள் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜக்கமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி அருகே வியாழக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி இருவேலியைச் சோ்ந்த மறைந்த மாட்டு வண்டி பந்தய வீரா் ஜமாலுதின் நினைவாக சின்னமாடு, பூஞ்சிட்டு எ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியை தாக்கியதாக தனிப் பிரிவு காவலா் பணியிடை நீக்கம்

முதுகுளத்தூா் அருகே மாற்றுத்திறனாளியைத் தாக்கியதாக எஸ்.பி. தனிப் பிரிவு காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு வருகிற 17 -ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம் அறிவிப்பு: கமுதியில் சமாதானக் கூட்டம்

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க