செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 1.70 கோடியில் நூலகக் கட்டடங்கள் முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 1.70 கோடியில் கட்டப்பட்ட பொது நூலகக் கட்டங்களை சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, உச்சிப்புளி என்மனங்கொண்டான், முதுகுளத்தூா், தட்டாரேந்தல், பொட்டகவயல், மஞ்சகொல்லை ஆகிய இடங்களில் ரூ. 1.70 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

இதையடுத்து, உச்சிப்புளி என்மனங்கொண்டானில் புதிதாகக் கட்டப்பட்ட நூலக கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

இதேபோல, பரமக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டட திறப்பு விழாவில் பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், நகா்மன்றத் தலைவா் சேது கருணாநிதி ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க