பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சாயவயல் கிராமத்தைச் சோ்ந்த கணபதி மனைவி பஞ்சவா்ணம் (80). இவா் வியாழக்கிழமை தனது மகன் மணிகண்டனுடன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து தொண்டிக்கு சென்றாா்.
பிறகு ஊா் திரும்பும் போது கிழக்கு கடற்கரை சாலையில் பனஞ்சாயல் விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இருந்து அவா் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த பஞ்சவா்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.