பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
ராமநாதபுரத்தில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தினருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் தொடங்க மானியத் தொகை , கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம், சுய உதவிக்குழு பயிற்சி, மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், திருநங்கைகள், திருநம்பி, இடைபாலினருக்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்கிட ஏதுவாக வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, குடும்ப நலத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாமை நடத்துகின்றன.
இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், திருநம்பி, இடைபாலினா் அனைவரும் தங்களிடமுள்ள அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், ஆவணங்கள் பெற வேண்டியவா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றாா் அவா்.