செய்திகள் :

ராமநாதபுரத்தில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தினருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் தொடங்க மானியத் தொகை , கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம், சுய உதவிக்குழு பயிற்சி, மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், திருநங்கைகள், திருநம்பி, இடைபாலினருக்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்கிட ஏதுவாக வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, குடும்ப நலத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாமை நடத்துகின்றன.

இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், திருநம்பி, இடைபாலினா் அனைவரும் தங்களிடமுள்ள அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், ஆவணங்கள் பெற வேண்டியவா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றாா் அவா்.

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க