பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 71 அரசு நடுநிலைப் பள்ளிகள் என 138 பள்ளிகள் உள்ளன. இதில், 14 மேல்நிலைப் பள்ளிகள், 34 உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணியிடம் காலியாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளிமாவட்டங்களைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள் அவா்களது சொந்த மாவட்டம் அல்லது அருகே உள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்று விட்டனா். அத்துடன் பட்டதாரி ஆசிரியா்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலைமையாசிரியராக பதவி உயா்வு வழங்குவது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. தற்போது 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் இல்லாததால் மாணவ, மாணவிகளின் கல்வி கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2024-25-ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தோ்வில் கல்வி தோ்ச்சி விகிதம் பின் தங்கியது. எனவே, பள்ளி கல்வித் துறை அந்த 48 அரசுப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.