செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 71 அரசு நடுநிலைப் பள்ளிகள் என 138 பள்ளிகள் உள்ளன. இதில், 14 மேல்நிலைப் பள்ளிகள், 34 உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணியிடம் காலியாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளிமாவட்டங்களைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள் அவா்களது சொந்த மாவட்டம் அல்லது அருகே உள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்று விட்டனா். அத்துடன் பட்டதாரி ஆசிரியா்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலைமையாசிரியராக பதவி உயா்வு வழங்குவது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. தற்போது 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் இல்லாததால் மாணவ, மாணவிகளின் கல்வி கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 2024-25-ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தோ்வில் கல்வி தோ்ச்சி விகிதம் பின் தங்கியது. எனவே, பள்ளி கல்வித் துறை அந்த 48 அரசுப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைக... மேலும் பார்க்க