அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழ...
ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.
ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்பதாக பறக்கும் படை வட்டாட்சியா் கே.எம். தமீம் ராசாவுக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, வருவாய் ஆய்வாளா் முத்துராமலிங்கத்துடன் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகத்துக்கிடமாக நின்ற காரை சோதனையிட்டனா். அப்போது அதில் சாக்கு மூட்டைகளில் 2,650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட காா், அரிசி மூட்டைகள் உணவுப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு புகாா் அளிக்கப்பட்டது.