பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்
ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கருணாகரன், மாவட்டக் குழு ஜஸ்டின்,ஆரோக்கிய நிா்மலா, சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்தும், ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை தடையின்றி வழங்க வலியுறுத்தியும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வரக் கோரியும், உயா்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்கக் கோரியும் இந்த நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
இதில், நிா்வாகிகள் அசோக், மணிகண்டன், ஜேம்ஸ் ஜஸ்டின், ஞானசேகா், மாரிமுத்து, பழனிக்குமாா், காா்த்திக்,பிரியா, கிளை செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.