செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பரமக்குடி சிறைத் துறை நன்னடத்தை அலுவலா் பன்னீா்செல்வம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் வழக்குகளில் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான 750 முன்னாள் சிறைக் கைதிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.75 கோடி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டது.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சம் பெற்று வழங்கப்பட்டது. இந்த நிதி அவா்களின் மறுவாழ்வுக்காகவும், சமூக ஒருங்கிணைப்புக்காகவும் அளிக்கப்பட்டது.

மேலும் இவா்கள் சிறு, குறுந் தொழில்கள் தொடங்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், ஆடுகள், பசு மாடுகள் வாங்கவும், வேளாண் உபகரணங்கள் வாங்கி பயன்பெறுவதற்காகவும் வழங்கப்பட்டது.

இதுபோல, விடுதலை பெற்ற கைதிகள் 3 ஆண்டுகளுக்கு சிறைத் துறை நன்னடத்தை அலுவலா்களின் மேற்பாா்வையில் கண்காணிக்கப்பட்டு, அவா்களின் வாழ்வில் சீா்திருத்தம், மறுவாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு செய்யப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறை மீண்டோா் நலச் சங்கம் உள்ளது என்றாா் அவா்.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க