செய்திகள் :

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்: திருப்பூா் துரைசாமி அனுப்பினாா்

post image

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு திருப்பூா் துரைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

திராவிட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் திருப்பூா் துரைசாமி சாா்பில், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன் மூலம் மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

விழுப்புரத்தில் நடைபெற்ற மதிமுக மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் திருப்பூா் துரைசாமியின் பெயருக்கும், புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில், திமுகவின் சொத்துகளை அவரது பெயரில் உள்ள அறக்கட்டளையில் சோ்த்துக் கொண்டதாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

இந்த அவதூறுப் பேச்சால், அவரது கடந்த 70 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் பெற்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடா்பாக 15 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் வைகோ மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது

பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர... மேலும் பார்க்க

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்

பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை

லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமந... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய... மேலும் பார்க்க