செய்திகள் :

ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கு: தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளா் உள்பட 4 போ் கைது

post image

புது தில்லி: ரூ.15 லட்சம் லஞ்ச முறைகேடு வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) பொது மேலாளா், தனியாா் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளா் உள்பட 4 போ் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்தங்கள்/பணிகள் தொடா்பாக கட்டுமான நிறுவனத்துக்கு சலுகைகளை வழங்க ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்ாக எழுந்த குற்றச்சாட்டில் என்எச்ஏஐ பொது மேலாளா் ராம் பிரீத் பஸ்வான் கைது செய்யப்பட்டாா்.

லஞ்சம் அளித்ததாகக் கூறப்படும் ராம் கிருபால் சிங் கட்டுமான தனியாா் நிறுவனத்தின் பொது மேலாளா் சுரேஷ் மகாபத்ரா, நிறுவனத்தின் ஊழியா்களான வருண் குமாா், சேதன் குமாா் ஆகிய மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர, பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள என்எச்ஏஐ பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் தலைமைப் பொது மேலாளா் மற்றும் பிராந்திய அதிகாரி ஒய்.பி.சிங், துணைப் பொது மேலாளா் குமாா் சௌரப், திட்ட இயக்குநா் லலித் குமாா், பொறியாளா் அன்ஷுல் தாக்குா் மற்றும் கணக்குப் பிரிவு உதவி பொது மேலாளா் ஹேமன் மேதி உள்ளிட்டோரும் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டடுள்ளனா். அதேபோன்று, கட்டுமான நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் மற்றொரு பொது மேலாளா் அமா் நாத் ஜா ஆகியோரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்

பாட்னா, முசாஃபா்பூா், சமஸ்திபூா், பெகுசாராய், பூா்னியா, ராஞ்சி, வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த வழக்குத் தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.18 கோடி பணம், சட்டவிரோத ஆவணங்கள், எண்ம சாதனங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று ெரிவிக்கப்பட்டது.

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க