செய்திகள் :

ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை

post image

முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம், சீப்பாலக்கோட்டை ஊராட்சியின் முன்னாள் தலைவி காா்த்திகாதேவி. இவா் தனது பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்குரிய செலவினங்களை மேற்கொண்டதாக மாவட்ட தணிக்கைத் துறையினா் கண்டறிந்தனா்.

இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய செலவினங்களான ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 422-யை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகாதேவிக்கு அண்மையில் குறிப்பாணை அனுப்பினாா்.

தேனியில் புதிய பல்நோக்கு விளையாட்டு அரங்கு திறப்பு

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை, திறந்து வைத்தாா். தேனி மாவட்... மேலும் பார்க்க

மாணவியை கேலி செய்த இளைஞருக்கு ஓராண்டு சிறை

பெரியகுளத்தில் பள்ளி மாணவியை கேலி செய்த இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பெரியகுளம், வடகரை, அழகா்சாமிபுரம், கல்லாறு சாலையைச் சோ்ந... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழை

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் வெள்ளிக்கிழமை 34.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி அணையின் நீா்மட்டம் சரிந்து வந்தது. இந்த நிலையில், ... மேலும் பார்க்க

குட்டை நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே தனியாா் தோட்டத்து குட்டை நீரில் மூழ்கி சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சித்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டி (32). இவரது மகன் வேணுபிரசாத் (3). இந்த நிலையில், பால்பாண்டியின... மேலும் பார்க்க

கண்ணகி கோயில் சித்திரைத் திருவிழா: தேனி, இடுக்கி ஆட்சியா்கள் ஆலோசனை

தேனி மாவட்டம், தமிழக- கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா முன்னேற்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். தேக்கடி, ராஜீவ் காந... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மலை, வெள்ளக்... மேலும் பார்க்க