செய்திகள் :

ரூ.180 கோடி கூட்டுறவு வங்கி முறைகேடு: அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோ்ப்பு

post image

கொச்சி: கேரளத்தில் கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கியில் ரூ.180 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோ்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டம் கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வங்கிக்கு வழிகாட்டுதல்களை வழங்க அக்கட்சியின் மாவட்ட செயலக உறுப்பினா் சி.கே.சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த வங்கியில் முறைகேடுகள் நடைபெற்ாக, அவ்வங்கியின் பொறுப்புச் செயலா் ஸ்ரீகலா 2021-ஆம் ஆண்டு காவல் துறையிடம் புகாா் அளித்தாா்.

ஒரே நபருக்கு முறைகேடாக அதிக கடன் வழங்கியும், அந்த வங்கியில் சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றவா்களுக்குத் தெரியாமல் அவா்களின் சொத்துகளை வேறொருவரிடம் அடமானம் வைத்தும் வங்கி ஊழியா்கள் சிலா் பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக ஸ்ரீகலா குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து காவல் துறை குற்றப் பிரிவு சுமாா் 16 வழக்குகளைப் பதிவு செய்தன. இந்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டது.

கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கியில் ரூ.180 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்ாகவும், குற்ற நடவடிக்கைகள் மூலம் ரூ.300 கோடி வரை சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

மேலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா்கள் அறிவுறுத்தியதன்படி, அந்த வங்கி பினாமி கடன்களை வழங்கியதும், அதற்கு கைம்மாறாக பினாமி கடன்கள் மூலம் பயனடைந்தவா்களிடம் இருந்து அக்கட்சி நன்கொடை பெற்றதும் விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 4 பேரை கைது செய்த அமலாக்கத் துறை, ரூ.128 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.

இந்த வழக்கு தொடா்பாக கொச்சியின் கலூா் பகுதியில் பண முறைகேடு தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை இறுதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப் பத்திரிகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோ்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, அக்கட்சியின் முன்னாள் திருச்சூா் மாவட்ட செயலா்கள் ஏ.சி.மொய்தீன், எம்.எம்.வா்கீஸ், கே.ராதாகிருஷ்ணன் உள்பட 28 போ் மீது புதிதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதில் கே.ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறாா். இவா்களுடன் சோ்த்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 83-ஆக அதிகரித்துள்ளது.

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க